Categories
Uncategorized

நமது மறை மாவட்டத்தின் புதிய ஆயர்

புதிய ஆயரின் வரலாறு:-

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை டாக்டர் அம்புரோஸ் பிச்சைமுத்து (58) அவர்கள் வேலூர் மறைமாவட்ட ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தந்தை அம்புரோஸ் அவர்கள், மே மாதம் 3 ஆம் தேதி 1966 இல் தமிழ்நாட்டின் செய்யூரில் பிறந்தார். 25 மார்ச் 1993ல் ஒரு கத்தோலிக்க குருத்துவராக அருட்பொழிவு செய்யப்பட்டார். அவர் கத்தோலிக்க பல்கலைக்கழகம், லியூவில் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் மற்றும், ரோம் ஏஞ்சலிக்கத்தில் இருந்து தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னை சான் தோம் கத்தீட்ரல் மற்றும் பல்லாவரம் புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்தில் உதவி பங்கு தந்தையாக பணியாற்றினார். அவர் செயின்ட் ஜோசப் கத்தீட்ரல், செங்கல்பட்டு, சேக்ரட் ஹார்ட் சர்ச், ஒரகடம் மற்றும் படப்பையில் உள்ள சகாய அன்னை ஆலயம் ஆகியவற்றின் பங்குத்தந்தையாக பணியாற்றினார். அவர் R C பள்ளிகளின் கண்காணிப்பாளராகவும், ஜீவன் ஜோதி இன்ஸ்டிடியூட் ஆப் அட்மினிஸ்ட்ரேட்டிவ் சர்வீசஸ் (JIAS) இயக்குநராகவும் இருந்தார். பூந்தமல்லி சேக்ரட் ஹார்ட் செமினரியில் துணைத் தாளாளர், பதிவாளர், நூலகர் மற்றும் பேராசிரியராகப் பணியாற்றினார். அவர் ஏழு ஆண்டுகள் செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் விக்கார் ஜெனரலாக இருந்தார். தற்போது, அவர் CCBI -ன் செயலாளராக இருந்தார். அவர் போன்டிஃபிகல் மிஷன் அமைப்புகளின் (PMO) தேசிய இயக்குநராக இருகிறார். இப்போது அவர் வேலூர் மறைமாவட்டத்தின் ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிதாக நமது மறை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்களே, வேலூர் மறைமாவட்டத்திற்கு நீங்கள் நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்! கடவுள் அவருக்கு ஞானத்தையும், இரக்கத்தையும், அவருடைய மந்தையை மேய்க்கும் தைரியத்தையும் தருவாராக. அவரது பணி, மகிழ்ச்சி, அமைதி மற்றும் பலன் நிறைந்ததாக இருக்கட்டும். அவரின் நல்ல ஆரோக்கியம், ஆன்மீக வளர்ச்சிக்காக நாம் ஜெபிப்போம்.

கடவுள் வேலூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் டாக்டர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!

By Rosary Shrine, N. Gengapattu

Welcome to Our Lady of Rosary Shrine, also known as Jebamalai Annai Thiruthalam (தூய ஜெபமாலை அன்னைத் திருத்தலம்), located in N. Gengapattu, Tiruvannamalai, Tamil Nadu. This holy shrine is a revered place of worship within the Catholic Church, dedicated to Our Lady of the Rosary. Pilgrims and devotees gather here to seek blessings, reflect in prayer, and participate in spiritual activities centered around the Holy Rosary.

The serene and sacred atmosphere of Our Lady of Rosary Shrine N. Gengapattu Shrine makes it a perfect place for reflection and devotion. Visitors are welcomed to experience the divine presence and the deep sense of faith that characterizes this holy place.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *